Sunday, June 15, 2014

காடு மிரண்டா வீடு கொள்ளாது..


சிங்காராவில் வாழ்ந்து சென்றவர்கள் கொண்டு செல்வது சுத்தமான காற்றும்.. கொஞ்சம் பிழையில்லா அழகியல் நினவுகளையும்தான்..

நான் மாதமொருமுறையேனும் சென்று வருவது.. எனக்குள்ளான ஆக்ஸிஜன்களை புதுப்பித்து என்னை புதுப்பித்துக் கொள்ளத்தான் போலும்!

கொஞ்சம் இடைவெளிவிட்டு மீண்டும் சிங்காரா சென்று வந்தேன்..



திருமதி.வர்கீஸ் அவர்களின் இரங்கல் செய்தியுடன் இந்த பதிவை துவங்குகிறேன்..  அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். 

புதிய மின் நிலையம் கட்டப்பட்ட பின்னர் நாம் பயன்படுத்திய  2G டைப் குடியிருப்புகள் பல பயன்பாட்டில் இல்லாமலும், மறு சீரமைக்கப்படாமலும் போய்விட்டன. 

அவற்றின் அழகிய தோற்றம் சில 

இங்கே.. 


நாம் இயற்கையிடம் எதை எடுத்துக்கொண்டோமோ.. அதை நம்மிடம் இருந்து இந்த காடுகள் திரும்ப எடுத்துக்கொண்டிருக்கிறது.. கீதையின் சாராம்சமேதான்.. இங்கே இன்னமும் கனகச்சிதமாய் பொருந்துகிறது.




மறைந்த திரு.கே.சி.ராமன் அவர்கள் நீண்டகாலமாக,  ஓய்வுபெறும்வரை வாழ்ந்த வீடு.. 






இந்த வீடு என் நினைவில் இருந்தவரை திரு.முத்துக்குட்டி ஆசாரி அவர்கள் இருந்த வீடுதான்.. தற்போது அவர்கள் குடும்பம் கோவையில் இருப்பதாய் தகவல்..


100 வருடங்களை நெருங்கும்போதும்.. மனித மனங்களைப்போல் அல்லாது நொறுங்கமல் நிமிர்ந்து நிற்கும் இந்த கட்டிடங்கள் நம்மில் பலரின் பால்யங்களை பத்திரமாக தனக்குள் வைத்துள்ளது.. என்றாவது நாம் வந்து கேட்டால் திரும்ப தரவேண்டும் என நினைத்திருக்கலாம்.


சமீபத்தில் பேசிய பலரும் ஒரு 1980-90மக்களின்  GET TOGETHER நடத்தினால் நன்றாக இருக்கும் என்றே சொல்கின்றனர்.. யார் முன்னெடுப்பது.. பொருளாதார சிக்கல்கள் என்று பல விடயங்களை யோசிக்கும்போது.. எஸ்கேப்பாகிவிடத்தான் தோன்றுகிறது... தற்போது சிங்காராவில் இருக்கும் பொறியாளர். திரு.சோமு.கருப்பையா அவர்கள் மாற்றலாகி செல்லும் முன்னர் இதை செய்துவிடுதல் நலம்..  


அவரது முகநூல் லிங்க் கீழே.. 
https://www.facebook.com/karuppiah.palaniappan?fref=ts

உங்களது கருத்துக்களை ஜகதீசனுக்கு 94432 08492 / கணேஷ் 9843211228 ல் அழைத்து சொல்லுங்கள்.



இப்போது வீடுகள் மட்டும் தமது பழம்பெருமைகளை பேசிக்கொண்டு திரிவது உற்று கேட்டால் மட்டுமே மட்டுப்படுகிறது. ஜீவனுள்ள வீடுகளாச்சே!!

இந்நிலையிலும்...  என் நிலை பரவாயில்லை என்பது போல் எங்கள் வீடு இன்னமும் அப்படியே உள்ளது மகிழ்ச்சிதான்.. கடவுள் இருக்கான் கொமாரு!!



எனக்கு தெரிஞ்சு.. ஜகதீசன பெத்த பாவத்துக்கு அவங்கப்பா.. திரு.மாதவன் அவர்கள் பரிகாரமா இந்த மரத்த நட்டு வெச்சாரு.. வீட்டுக்கொரு மரம் வளத்துங்கன்னு சொன்னதுக்காக அவரு அட்லீஸ்ட் ஊருக்கொரு மரம் வளக்கலாம்னு முடிவு பண்ணிட்டாரு போல... 


நம்ம ரவுண்டானாவே குளுகுளுன்னு இருக்க காரணமான அவருக்கு ஒரு ஓ போடுவோம்! 


 யூ ட்யூபில் வலம் வந்தபோது கண்ணில் பட்ட பாடல்..

முழுவதும்  சிங்காரா கார்டனில் எடுக்கப்பட்ட ஒ(ரே)ரு  பாடல் காட்சி..

http://www.youtube.com/watch?v=QZaL_g8Ul5s

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்..

நன்றிகளுடன்..

கணேஷ் நாராயணஸ்வாமி.